News August 21, 2025

நிலுவை மின் கட்டணம் செலுத்த எச்சரிக்கை!

image

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் கிராமம் தெற்கு கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையான், புத்தூர் ஆகிய மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். கட்டணம் செலுத்திய பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது

Similar News

News February 7, 2026

புதுச்சேரியில் நர்சிங் மாணவி மாயம்

image

புதுச்சேரி மாநிலம் தருமபுரி கலைமகள் நகரைச் சேர்ந்த முருகவேலின் மகள் மோகனப்பிரியா (19), நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 7, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று (07.02.2026) காலை 10.00 மணி முதல், மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவு குட்டை வீதி, ஆனை பிள்ளை மறைக்கர் வீதி, கால்மாட்டு வீதி, காதர் சுல்தான் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி பொறியாளர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!