News August 21, 2025
தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.
Similar News
News August 21, 2025
விஜய் அறியாமையில் பேசுகிறார்: இபிஎஸ்

மதுரை மாநாட்டில் அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு, இபிஎஸ் பதிலளித்துள்ளார். பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
News August 21, 2025
BEAUTY TIPS: இந்த தப்ப பண்ணிடாதீங்க

தோல் பராமரிப்பில் Moisturizer-ன் பங்கு முக்கியமானது. சருமத்தை பாதுகாக்கும் Moisturizer-ஐ பயன்படுத்துவதில், சிலர் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் கவனத்திற்கு: ▶லேசான ஈரப்பதத்தில் Moisturizer-ஐ தடவவும். உலர்ந்த முகத்தில் தடவவேண்டாம். ▶skin type-க்கு ஏற்ப Moisturizer-ஐ தேர்ந்தெடுப்பது அவசியம். ▶தூங்கும் முன் Moisturizer-ஐ பயன்படுத்தவும். ▶இதனை தினமும் பயன்படுத்த வேண்டும். SHARE.
News August 21, 2025
3 வீரர்களை கைவிடும் மும்பை இந்தியன்ஸ்?

IPL 2025 சீசன், MI அணியை சற்றே சோதித்தது எனலாம். Playoff வரை சென்றாலும், அதற்கான போராட்டம் கடுமையாக இருந்தது. இதற்கு அணியில் ஏற்பட்ட சில மாற்றங்களும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், 2026 IPL ஏலத்தில் தீபக் சாஹர், ரீஸ் டோப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர்களின் குறைவான பங்களிப்பே காரணமாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?