News August 21, 2025

குமரி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 9, 2026

குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது

image

குமரி மாவட்டம், மேலக்கலுங்கடியை சேர்ந்தவர் கார்த்திக் (36) இவர் கேமரா பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். ஜூலை மாதம் 19ம் தேதி மர்மமான முறையில் அந்தப்பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்களும் இருந்தது. போலீசார் விசாரணையில் சிலர் அவரிடம் தகராறு செய்ததும் அப்போது அவர் கீழே விழுந்தது உயிரிழந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News February 9, 2026

குமரி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

கன்னியாகுமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இ<>ங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க!

News February 9, 2026

குமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை

image

வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதா குமாரி (30). இவர் 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுதா குமாரி கணவர் குடித்துவிட்டு வந்ததால் சுதா குமாரி உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!