News August 21, 2025
5 லட்சம் அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ₹5 லட்சம் சிறப்புப் பரிசு மற்றும் ₹7,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம், என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். SHAREIT
Similar News
News August 21, 2025
நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்!

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் நாளை (22.08.2025 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வாய்ப்புகள் செய்துத்தரப்படும்.
News August 21, 2025
நாமக்கல் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
News August 21, 2025
நாமக்கல் மக்களே 750 பேங்க் ஆபிசர் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே..பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<