News August 21, 2025

38 மாவட்டங்களிலும்.. அரசு புதிய அறிவிப்பு

image

வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு TN அரசு டெண்டர் கோரியுள்ளது. 38 மாவட்டங்களில் சுமார் 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், *அவர்கள் தமிழகம் வருவதற்கான காரணம், *எங்கு உள்ளனர் *வாழ்க்கை நிலை *சுகாதார நிலை *என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து?

Similar News

News January 18, 2026

நெல்லை: சுற்றுலாவிற்கு நாளை முதல் தடை!

image

களக்காடு புலிகள் காப்பக வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், சுற்றுலாவிற்கும் நாளை (ஜன 19) முதல் 6 நாட்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தலைமையில், மாநில வன துறைகளின் ஒத்துழைப்புடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

News January 18, 2026

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

image

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News January 18, 2026

தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

image

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.

error: Content is protected !!