News August 21, 2025

விநாயகர் சிலையை நிறுவ விண்ணப்பிக்க வேண்டும்

image

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!

News February 8, 2026

தருமபுரியில் ஆட்சியர் ஆய்வு!

image

தருமபுரி பேருந்து நிலையம் திறந்து வைத்ததை தொடரந்து பொதுமக்கள் அனைவரும் அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் அனைத்து ஊர்களுக்கும் பயனம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து விதமான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை நான்கு ரோடு சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (பிப்.7) ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

News February 8, 2026

தருமபுரி: தூக்கி வீசப்பட்ட மாணவன் பலி!

image

பாலக்கோடு குப்பன் கொட்டாயை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஹரி பிரசாந்த் அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (பிப்.7) மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!