News August 21, 2025
கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!

நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News February 4, 2026
சாணார்பட்டி அருகே பயங்கரம்: ஒருவர் பலி

சாணார்பட்டி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சாணார்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (60) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News February 4, 2026
மக்களை ஏமாற்றும் ஈபிஎஸ் – அமைச்சர் பெரியசாமி தாக்கு!

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “10 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி கல்வி கடனை ஏன் ரத்து செய்யவில்லை?. மத்தியில் இருக்கும் மோடி அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். தன்னை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்” என கடுமையாக சாடினார்.
News February 4, 2026
திண்டுக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

திண்டுக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


