News August 21, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து செலும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொலைபேசி மூலமாக அல்லது நேரடியாக 100 என்ற எண்களை டயல் செய்து தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News August 20, 2025
ஆட்சியர் தலைமையில் நான் முதல்வன் திட்ட பணிகள் கூட்டம்

ததஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்ட பணிகள் தொடர்பாக முன்திட்டமிடல் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News August 20, 2025
தஞ்சை ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இகூட்டமானது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளர்த்திடும் தளிர்” திட்ட பணிகள் குறித்து, கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News August 20, 2025
தஞ்சாவூர் மக்களே உஷார்…! ஆன்லைன் லோன் மோசடி!

நமது தஞ்சை மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!