News August 20, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆக. 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 21, 2025

விழுப்புரத்தில் நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை

image

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சாவித்திரி 34, இவரது வீட்டின் உள் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின், ரூ. 20,000 நேற்று காணாமல் போனது, பீரோவை உடைக்காமல், நகை மற்றும் பணம் மாயமாகியுள்ளது. சந்தேகத்தின் பேரில், இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 21, 2025

விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

விழுப்புரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 21, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை.. செம வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இடங்களில் உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்த 21-32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் செப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!