News August 20, 2025
பாம்பன் மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி ரூபாய் அபராதம்

பாம்பன் பகுதியை சேர்ந்த 9 நாட்டுப்படகு மீனவர்களின் வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தலா ஒரு மீனவருக்கு 3 கோடியே 50 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் (இலங்கை பணம்) அபராத தொகையாக செலுத்த வேண்டும் எனவும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத காலம் மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
Similar News
News August 20, 2025
ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.
News August 20, 2025
வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

ராம்நாடு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியம். மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம்.
News August 20, 2025
ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!