News August 20, 2025

121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

image

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.

Similar News

News February 3, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹20,000 மாறியது

image

<<19039267>>தங்கத்தை போல்<<>> வெள்ளி விலையும் மீண்டும் ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. காலையில் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 குறைந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மாலையில் அதே ₹20,000 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹1.25 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 3, 2026

பள்ளி மாணவன் பையில் கஞ்சா: அரசை சாடிய நயினார்

image

சென்னையில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் கஞ்சா எடுத்து சென்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக்கத்தியும் புழங்கும் நிலையில், ‘கல்வியில் சிறந்த TN’ என்று விழா எடுத்ததற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் சாடியுள்ளார். மேலும், திமுகவை அகற்றினால் மட்டுமே TN நிம்மதிப் பெருமூச்சு விடும் என்றார்.

News February 3, 2026

மாதம் ₹1,500.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

image

மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள், பெண்கள்) தங்கள் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்ய ஏதுவாக TN அரசு மாதம் ₹1,500 வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த ஓய்வூதியத்தை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், VAO, தாசில்தாரை சந்தித்து விண்ணப்ப படிவத்தை பெற்று, உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், <>TNesevai <<>>இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!