News August 20, 2025

ஈரோடு: திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை

image

ஈரோடு: வெள்ளித்திருப்பூர் அருகே கொமராயனுார், மசக்கவுண்டனுாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விவேக்(29). விவசாயியான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பாப்பாத்தி காட்டுப்புதுாரில் உள்ள பாட்டி தோட்டத்துக்கு சென்றவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று(ஆக.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 20, 2025

ஈரோட்டில் ரூ.25,000 சம்பளம்: SUPER வேலை!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள BRANCH INCHARGE பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 20, 2025

ஈரோடு: ரூ.76,380 சம்பளம்: அரசு உதவியாளர் வேலை!

image

ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 59 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 20, 2025

ஈரோடு: மனைவிக்கு கணவர் கத்தி குத்து!

image

ஈரோடு: சூரம்பட்டியைச் சேர்ந்த தம்பதி மாதேஸ்வரன் (36) – கோகிலா (33). இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக 1½ மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து ஈரோடு பெரியார்நகரில் உள்ள தாய் வீட்டில் கோகிலா வசித்து வந்தார். இந்நிலையில், பெரியார்நகர் வந்த மாதேஸ்வரன், கோகிலாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரைக் கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!