News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>

Similar News

News August 20, 2025

திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

image

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

image

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!