News August 20, 2025

விருதுநகர்: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே கிளிக் செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 13, 2025

சிவகாசியில் கூடுதல் ஆய்வு குழு

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.

News September 12, 2025

தற்செயல் விடுப்பு போராட்டம் – 1473 ஊழியர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில், மாவட்ட முழுவதிலும் 1473 பேர் ஆப்செண்ட் ஆகினார். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

News September 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – கலெக்டர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!