News April 8, 2024

மக்களை கிறுகிறுக்க வைக்கும் ‘போதை’ அரசியல்

image

கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேர்தல் பரபரப்பை கூட்டி வருகின்றன. எது எப்படியோ தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

Similar News

News November 5, 2025

‘Sorry அம்மா.. நான் செத்துப் போறேன்’

image

CA தேர்வில் தோல்வியடைந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த அகில் வெங்கட கிருஷ்ணா (29) என்ற மாணவர், தனது பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நான் உங்களை ஏமாற்றிவிட்டேன். இனி நான் வாழத் தகுதியற்றவன், என்னை மன்னித்து விடுங்கள்’ என கடிதம் எழுதி எழுதியுள்ளார். பின்னர், நேற்று இரவு முகத்தில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொண்டு ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.

News November 5, 2025

வாக்கு திருட்டில் ஈடுபட்டாரா பாஜக நிர்வாகி?

image

உ.பி அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு ஹரியானா & உ.பி என 2 மாநிலத்திலும் வாக்குகள் உள்ளது என்பதை ராகுல் அம்பலப்படுத்தியுள்ளார். தால்சந்தின் மகன் யஷ்வீருக்கும் உ.பி மதுராவிலும் ஹரியானாவில் ஹோடல் தொகுதியிலும் வாக்கு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதேபோல ஆயிரக் கணக்கானோருக்கு உ.பி, ஹரியானா என 2 மாநிலங்களிலும் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

ஒரு வீட்டில் 501 வாக்காளர்களா? கேள்விகளை அடுக்கிய ராகுல்

image

2-க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் EC-யிடம் உள்ள நிலையில், அதை ஏன் பயன்படுத்தவில்லை என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். EC வேண்டுமென்றே இவற்றை சரிபார்க்கவில்லை என்ற அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொய் சொல்வதாக குற்றம்சாட்டினார். ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக பதிவில் இருக்க, அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!