News August 20, 2025
வேளாண் மார்க்கெட் கொள்முதல் – 1 லட்சம் விவசாயிகள் பலன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 9 மார்க்கெட் கமிட்டிகளில் 1,01,212 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84,747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ.260.59 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 20, 2025
விழுப்புரம் புதுச்சேரி பயணிகள் ரயில் முழுமையாக ரத்து

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகளின் ரயில்கள் (66063,66064) ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
News August 20, 2025
கல்வெட்டு அமைக்கும் பணி ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டில் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 20 புதன்கிழமை திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார் உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர் ஆர் எஸ் ரவிச்சந்திரன் புனிதா ராஜேந்திரன் ரம்யா ராஜா ஆகியோர் உடன் இருந்தனர் இருந்தனர்