News August 20, 2025

சிவகாசியில் 746 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்

image

சிவகாசி பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு ஆடைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஜூலை 1 முதல் 2025 மார்ச் வரை பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் இருந்த 746 தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடும் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 85 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)

2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)

3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)

4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)

5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

சிவகாசி: செல்போன் கடைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்

image

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் கூரையை பிரித்து கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 2 நாட்களுக்கு முன் அருகில் உள்ள செல்போன் கடையில் திருடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு செல்போன் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2025

விருதுநகர்: இந்த எண்களை கட்டாயம் SAVE பண்ணிக்கோங்க

image

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!