News August 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 433 ▶குறள்: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். ▶ பொருள்: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

Similar News

News January 24, 2026

யுவனை மிரள வைத்த ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்

image

அஜித் கரியரில் முக்கியமான படமான ‘மங்காத்தா’ நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய படத்தை போல கொண்டாடப்படும் ‘மங்காத்தா’ வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்துக்கான கொண்டாட்டம் வெறித்தனமாக உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றியது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 24, 2026

BREAKING: மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…

image

TN முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டில் TN அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், தற்போது 28 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும், 7 மாவட்டங்களில் இதனை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டிலை ₹10 அதிகம் கொடுத்து வாங்கி, பின்னர் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்ப பெறுவதே இந்த திட்டம்.

News January 24, 2026

மத்திய அரசை எதிர்ப்பதே திமுகவின் சாதனை: வானதி

image

செலவின கணக்கை சொல்லாமல், பொத்தாம் பொதுவாக நிதி வரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுவதாக வானதி சாடியுள்ளார். ஸ்டிக்கர் ஒட்டுவதையும், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை மட்டுமே சாதனையாக வைத்து திமுக ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். TN-ன் தொழில் வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும், அமைச்சர்கள் மீதான புகார்களுக்கு எந்த விளக்கமும் அரசுத் தரப்பில் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் .

error: Content is protected !!