News April 8, 2024
தங்கம் விலை ரூ.53,000-ஐ தாண்டியது

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.53,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.88,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News April 3, 2026
என்னை கத்தி கத்தி சாக விடாதீர்கள்: சீமான்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் உருப்படியான ஒரு முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று நிம்மதியாக சாகவிடுங்கள் அல்லது தன்னிடம் தமிழகத்தை கொடுத்து வாய்ப்பளியுங்கள் என சீமான் கூறினார். மேலும் 15 ஆண்டுகளாக மக்களுக்காக கத்திவிட்டேன்; என் பாவமே உங்களை சும்மா விடாது என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
பூத் ஏஜெண்ட் ஆக இருப்பேன்: அண்ணாமலை

சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஓட்டுப்பதிவு(ஏப்.23 ) நாளன்று முதல் ஆளாக வாக்கு செலுத்திவிட்டு, அதன்பிறகு ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜெண்ட் ஆக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: வினைத்தூய்மை
▶குறள் எண்: 652
▶குறள்: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
▶பொருள்: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.


