News August 19, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 19) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News February 3, 2026
செங்கல்பட்டு: UKG மாணவனை கடித்த குரங்கு!

செங்கல்பட்டு: சித்தாமூர் அருகே உள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் UKG படித்து வரும் பாக்யராஜ் என்பவரது மகன் டிருஜுல் நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். பள்ளியில் சிறுவனை குரங்கு கடித்ததாக தெரிகிறது. மதியம் பாக்யராஜூக்கு போன் செய்த பள்ளி நிர்வாகத்தினர் உங்கள் மகனை குரங்கு கடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். டிருஜுல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News February 3, 2026
செங்கல்பட்டு: கணவர் முன்னே உடல் கருகி பலி!

கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி(40). தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தார். அவரது கணவர் சுதாகருக்கும் இவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 30ஆம் தேதி கணவரை மிரட்ட, உடலில் மண்எண்ணெய் ஊற்றிய போது, அடுப்பில் இருந்த தீ, டெய்சி மீது பற்றியது. இதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
News February 3, 2026
செங்கல்பட்டு: நொடி பொழுதில் கோரம்; தலைநசுங்கி பலி

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.


