News April 8, 2024
அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

டெல்லியில் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 5ஆம் தேதி வந்த பயணிகளிடம் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 2 பயணிகள், அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமென திடீரென மிரட்டல் விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த 2 பேரையும் கைது செய்து, விமான நிலையை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 12, 2025
30 வயதை கடந்த பெண்களே.. இத கவனியுங்க!

பெண்கள் 30 வயதை அடைந்து விட்டால், இந்த டெஸ்ட்டுகளை செய்து கொள்வது அவசியம்.
➤Mammography: மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
➤Thyroid Test: எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் ஆகியவற்றை கண்டறிய உதவும் டெஸ்ட்.
➤Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
➤Complete blood count (CBC): ரத்த சோகை குறித்து அறிந்து கொள்ள, இந்த டெஸ்ட் செய்யுங்கள். SHARE IT.
News August 12, 2025
‘தாயுமானவர் திட்டம்’ தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி

TN அரசின் ‘<<17336334>>தாயுமானவர் திட்டம்<<>>’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த திட்டத்தையே தற்போது TN அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 12, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

உலகிலேயே அதிக நீரை உறிஞ்சுவது இந்த டேட்டா செண்டர்கள் தான். AI-ஐ ட்ரெயின் செய்வதற்கும், பதில்களை கொடுக்கவைப்பதற்கும், தரவுகளை சேமிப்பதற்கும் டேட்டா செண்டர்கள் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, 100 மெகாவாட் கொண்ட டேட்டா செண்டர் ஒரு நாளுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறதாம். எனவே AI-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு 10 மி.லி. தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே..