News August 19, 2025
நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாக தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
Similar News
News February 3, 2026
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
ப.வேலூர் அருகே சோகம்: வாலிபர் பலி!

கபிலர்மலை கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் (21). நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், மாணிக்கராஜ் மட்டும் வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர் ஒரு மணி நேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
பள்ளிப்பாளையம் அருகே விபத்து: பெண் பலி

பள்ளிப்பாளையம் அருகே ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி (59) என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


