News August 19, 2025
BIG NEWS: சென்னையில் நாய் கடித்து ஒருவர் பலி

சென்னை குமரன் நகர் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கடிதத்தில் கருணாகரன்(55) என்பவர் உயிரிழந்தார். அவரை அந்த நாய் தொடை, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளர் பூங்கொடியும் காயமடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தடை செய்யப்பட்ட நாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 11, 2026
சென்னை: குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய தாழ்த்தள மின்சார ‘குளிர்சாதன ப்ரீமியம் பேருந்து’ சேவையை இன்று(மார்ச் 11) தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சிவசங்கர்., தண்டையார்பேட்டை பேருந்து பணிமனையில் புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
News March 11, 2026
பெரும்பாக்கம்: தாய், மகள் துடிதுடித்து பலி!

சென்னை: பெரும்பாக்கம், சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்களின் மகள் இனியா (13), பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 10) காலை பைக்கில் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது
News March 11, 2026
சென்னை கலெக்டர் எச்சரிக்கை!

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ’சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி தவறான நபர்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிரான மற்றும் தவறான செயல். இது போன்ற தவறான தகவல் மற்றும் கடிதங்கள் அனுப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


