News August 19, 2025

ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பால் கலெக்டர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர் மடம் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News November 14, 2025

சருமபுரி: குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (நவ.14) வாசித்தார். பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2025

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை குழந்தைகள் தினமான இன்று (நவ.14) வழங்கி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வழங்கி துவங்கி வைத்தார்கள்.

error: Content is protected !!