News August 19, 2025
நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, MP கனிமொழி சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பிலான முக்கிய கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர். இந்த GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 19, 2025
நிதியை கொடுப்பார் என நம்புகிறேன்: CM ஸ்டாலின்

TN அரசின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் உரிய நிதியை FM நிர்மலா விடுவிப்பார் என நம்புவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ<<17453647>>மைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி<<>> ஆகியோர் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து இதனை பதிவிட்டுள்ளார். முன்னதாக நபார்டு வங்கியின் RIDF, மற்றும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கான FIDF நிதியை விடுவிக்க CM ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.
News August 19, 2025
VIRAL: வெள்ளத்தின் நடுவே ஒரு ‘செல்பி’!

வரலாறு காணாத கன மழையால் மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒருவர் சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகியுள்ளது. அனைத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணி, என்ஜாய் பண்ற மனப்பான்மை இந்தியர்களிடம் அதிகரித்து விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார். நீங்க என்ன சொல்றீங்க?
News August 19, 2025
இன்று இரவுடன் ₹249 பிளானை ரத்து செய்யும் ஏர்டெல்!

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இன்று நள்ளிரவுடன் முக்கியமான ரீசார்ஜ் பிளானை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹249 ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு இலவச அழைப்புகளுடன் தினமும் 1GB இன்டர்நெட் சேவையை அந்நிறுவனம் வழங்கி வந்தது. இந்த பிளான் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த பிளானை ஜியோ நிறுவனம் நேற்று நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.