News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

Similar News

News March 5, 2026

நீலகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்

image

பந்தலூரில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர், திமுக நெல்லியாளம் நகர செயலாளர் சேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் ஞானசேகர், மாவட்ட துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்து புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

News March 5, 2026

நீலகிரி: டேட்டிங் ஆப்-ல் இளம்பெண் மோசடி

image

நீலகிரியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற இளம் பெண்ணின் பேச்சில் நம்பிக்கை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். முதலில் ரூ.43 ஆயிரம் முதலீட்டில் லாபம் கிடைத்ததால், ரூ.20 லட்சம் வரை செலுத்தினார். பின்னர் பணம் திரும்ப கிடைக்காமல், தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News March 5, 2026

நீலகிரி: பேருந்து நிலையத்தில் குடியேறிய போராட்டக்காரர்கள்

image

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சி செட்டிவயல் பகுதிக்கு சாலை வசதி கோரி 2வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. காலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட போராட்ட குழுவினர், போராட்டத்தை கைவிடாமல் பந்தலூர் பேருந்து நிலையத்தில் குடியேறி மீண்டும் சாலை வசதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!