News August 19, 2025
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுவில் காலியிடம்

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுவில் சமூகப்பணி உறுப்பினர் 2 இடங்களுக்கு அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. 2015ம் ஆண்டு இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நியமனத்திற்கு 35 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், குழந்தைகள் நலன், கல்வி, உளவியல், சட்டம் போன்ற துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 மாலை 5.00 மணி.
Similar News
News August 19, 2025
தூத்துக்குடி – நாகை 312 கி.மீ நீள பசுமை பாதை

இன்று (19.8.2025) இந்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி-நாகை இடையே புதியதாக 312 கிலோ மீட்டர் நீளத்தில் பசுமை வழி நான்கு வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் என கூறப்பட்டு உள்ளது.
News August 19, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு…

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு உதவி தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகஸ்ட்.15 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் https://umis.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
News August 19, 2025
௹.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மச்சாதுபாலம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு சரக்கு வாகனத்தில் இலங்கை கடத்துவதற்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ எடை கொண்ட 43 மூடைகளில் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.