News August 19, 2025

நாகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

நாகை: திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைஞாயிறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் மற்றும் அவரது கணவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையடுத்து புதிதாக இணைந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 14, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 – ஐ முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News March 14, 2026

மகிழ்ச்சியில் மிதக்கும் நாகை மக்கள்; இதோ அறிவிப்பு!

image

எா்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் (16363) எா்ணாகுளத்திலிருந்து மாா்ச் 18 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளிலும், 16364 வேளாங்கண்ணி – எா்ணாகுளம் விரைவு ரயில் (16364) வேளாங்கண்ணியிலிருந்து மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!