News August 19, 2025

மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

image

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.

Similar News

News August 19, 2025

சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

image

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

அமித்ஷா மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையா?

image

நெல்லையின் தச்சநல்லூர் பகுதியில் ஆக.22-ம் தேதி அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என நெல்லை மாநகர துணை ஆணையர் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனுமதி பரிசீலனையில் உள்ளது எனவும், பேனர் வைக்க மட்டுமே அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!