News August 19, 2025

செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

Similar News

News March 28, 2026

செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 28, 2026

செங்கல்பட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

image

செம்பாக்கத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாபர் எஸ்கே, லிப்ட் இயந்திரத்தில் இரும்பு ஷீட்டுகளை ஏற்றும்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 28, 2026

செங்கல்பட்டு: பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்தவர் மோகன், நர்சிங் படித்து வந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், திருமணம் செய்ய மறுத்து இளம்பெண்ணை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண் காவல்நிலையில் புகார் அளித்தார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து செங்கை மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!