News August 19, 2025
4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 24-ம் தேதி வரையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 25, 2026
தவெக வேட்பாளர்கள் பட்டியல்.. விஜய்யின் வியூகம்

தவெகவில் முதற்கட்டமாக 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வரும் 27-ம் தேதி விஜய் வெளியிட உள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 110 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதில், EX அமைச்சர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் பலர் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 25, 2026
அன்று IPL-ல் Chance கிடைக்கல.. இன்று RCB ஓனர்!

RCB அணியின் உரிமையை <<19469065>>ஆதித்ய பிர்லா<<>> குழுமம் வாங்கியுள்ளது. அதன்படி, RCB-ன் புதிய சேர்மனாக குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்யமான் உள்நாட்டு கிரிக்கெட்டில் MP அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், 2018 & 2019-ம் ஆண்டுகளில், இவர் IPL-ல் RR அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால், விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2019-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
News March 25, 2026
திருநங்கைகள் மீது சட்டத்தை திணிக்காதீர்: CM ஸ்டாலின்

ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்காக என்ற பெயரில் இயற்றப்படும் ஒரு சட்டத்தை, அச்சமூக மக்களே எதிர்த்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சட்டத்தை திணிக்காமல், ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்றார். மேலும், திருநங்கையர்களுடன் கலந்துபேசி, கருத்து கேட்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.


