News August 19, 2025

காஞ்சி: கணவனை கொல்ல கூலிப்படை ஏவிய மனைவி

image

மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News August 19, 2025

காஞ்சிபுரம் மாவட்டம் வெற்றி!

image

திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். அதில், 22 மாணவர்கள் முதல் இடம், 14 மாணவர்கள் 2ஆம் இடம், 11 மாணவர்கள் 3ஆம் இடம் என வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

News August 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

காஞ்சிபுரம்: இன்றைய காய்கறி விலை நிலவரம்

image

காஞ்சிபுரம் உழவர் சந்தையின் இன்றைய (ஆக.18) காய்கறி விலை நிலவரம். (1 கிலோ) தக்காளி ரூ.50-60, உருளைக்கிழங்கு ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.55-65, பெரிய வெங்காயம் ரூ.20-25, பச்சை மிளகாய் ரூ.35-40, கத்தரிக்காய் ரூ.35-40, வெண்டைக்காய் ரூ.35-40, முருங்கைக்காய் ரூ.55-60, பீர்க்கங்காய் ரூ.35-45, சுரைக்காய் ரூ.15-25, புடலங்காய் ரூ.25-35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!