News August 19, 2025

திருச்சி: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 50,000 முதல் 70,000 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகையால் திருச்சி மாவட்டத்தில் கம்பரசம்பேட்டை, மேலூர் உள்ளிட்ட காவிரி கொள்ளிட கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

image

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

திருச்சி: 104 காலிப் பணியிடங்கள்; நெருங்கும் கடைசி தேதி

image

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (ஆக.21) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தில் வழங்க வேண்டும். தாலுகா வாரியாக காலி பணியிடங்களை தெரிந்து கொள்ள <<17450363>>இங்கே<<>> பார்க்கவும்.

News August 19, 2025

திருச்சி: தாலுகா வாரியான VA காலியிடங்கள் எண்ணிக்கை

image

➡️ திருச்சி கிழக்கு – 01
➡️ திருச்சி மேற்கு – 04
➡️ திருவெறும்பூர் – 05
➡️ ஸ்ரீரங்கம் – 18
➡️ மணப்பாறை – 06
➡️ மருங்காபுரி – 07
➡️ லால்குடி – 22
➡️ மண்ணச்சநல்லூர் – 08
➡️ முசிறி – 09
➡️ துறையூர் – 18
➡️ தொட்டியம் – 06. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!!

error: Content is protected !!