News August 19, 2025

2 மாதங்களில் விட்டதை பிடித்த திமுக.. தென்காசி சம்பவம்!

image

தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த ஜூனில் பதவியை இழந்த DMK, இன்று ADMK ஆதரவுடன் மீண்டும் அரியணை ஏறியுள்ளது. ADMK-12, DMK-9, MDMK-2, காங்., SDPI தலா 1, சுயேச்சைகள் 5 என 30 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது ADMK, DMK தலா 15 வாக்குகள் பெற்றன. இதனால், குலுக்கலில் உமா மகேஸ்வரி சேர்மேன் ஆனார். இந்நிலையில், புஷ்பத்தை வீழ்த்தி திமுகவின் கௌசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Similar News

News August 23, 2025

தலையில்லாத விநாயகர் கோயில்!

image

புராணங்களின் படி, பார்வதி நீராடச் சென்றபோது, வெளியே விநாயகர் காவலுக்கு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவனை, விநாயகர் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையைத் துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட இடமாக கருதி, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் முன்கடியா என்ற கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோயில் அமைந்துள்ளது. SHARE IT.

News August 23, 2025

விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

image

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

News August 23, 2025

என்னிடம் கற்றதை விஜய் சொல்கிறார்: சீமான்

image

TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.

error: Content is protected !!