News August 19, 2025
அனைத்து ‘திருட்டு’களையும் கண்டறிவோம்: ராகுல் வார்னிங்

<<17339036>>வாக்காளர் திருட்டுக்கு<<>> பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ECI-யுடையது என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் திருட்டுக்கு நாங்கள் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஒட்டுமொத்த நாடும் உங்களை பிரமாண பத்திரம் கேட்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், MP தொகுதியிலும், MLA தொகுதியிலும் உங்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று ECI-யை எச்சரித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

* பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
* உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
* மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
* உங்களை நீங்களே கடினமாகத் தள்ளிக்கொள்ள இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். ஆசைதான் வெற்றிக்கு முக்கியமாகும்.
News August 19, 2025
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் மழைத் தீவிரமடைந்துள்ளதால் KRS, கபினி அணைகளிலிருந்து 95,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வரத்தொடங்கி இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படலாம். இதனால் சேலம் உள்ளிட்ட காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News August 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 432 ▶குறள்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. ▶ பொருள்: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.