News August 18, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை உள்ள பகுதிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், மதுரப்பாக்கம், கஞ்சனுார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஆகஸ்ட் 19) காலை 9 மாலை 6 வரை வழுதாவூர், கெங்கராம்பாளையம், சித்தலம்பட்டு, கண்டாச்சிபுரம், குயிலாப்பாளையம், முகையூர், பரனூர், புதுப்பாளையம், பகண்டை, நெற்குணம், திருமங்கலம், கரைமேடு, நகரி, ஆலம்பாடி, ஓதியத்தூர், தொரவி ஆகிய இடங்களில் மின் தடை.
Similar News
News March 10, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய விசிக!

விழுப்புரம்: புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞர்கள் நேற்று(மார்ச் 9) இணைந்தனர். இவர்களை, விச்கவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொடர்கள் பலரும் உடன் இருந்தனர்.
News March 10, 2026
விழுப்புரத்தில் பயங்கர விபத்து!

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சிவராஜ்(38). சம்பவத்தன்று இவர், தனது மனைவி சியாமளாதேவி(35), மகன் சாய் சரவணன்(3) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது பைக்கில் புறப்பட்டார். வளவனூர் அருகே, கோவையைச் சேர்ந்த அபிஷேக்(33) ஓட்டி வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த சிவராஜ், சியாமளா தேவி, சரவணன் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News March 10, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


