News August 18, 2025

3 கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணா மக்கள் இயக்கம், சமத்துவ மக்கள் கழகம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், அவற்றின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு வரும் 26 ஆம் தேதி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை வாய்ப்பு மோசடி ”வீட்டிலிருந்தே வேலை” தினமும் ரூபாய் 2000 வருமானம் என்று வாட்ஸ்அப்மெயில் மூலம் அழைப்பர். ஆரம்பத்தில் சிறிய வேலை கொடுத்து ரூ.100 – 500 போலியான சம்பளம் தருவார். அதன் பிறகு “பெரிய ப்ராஜெக்ட்” எடுக்க டெபாசிட் பணம் கொடுக்க வேண்டும் சொல்லி ஏமாற்றுவார்கள். பணம் அனுப்பியவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.

News August 18, 2025

திருவள்ளூர்: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <>இந்த UIDA<<>> என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

திருவள்ளூர்: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே<<>> கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!