News August 18, 2025
BREAKING: ஈரோடு அருகே பெண் வெட்டி படுகொலை

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் 4வது வீதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி விஜயா வயது 38 என்பவர். இன்று மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News August 19, 2025
ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
News August 19, 2025
ஈரோடு: இன்று நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், இன்று ஆக.,19 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. சித்தோடு (சித்தோடு செங்குந்த கைகோல முதலியார் திருமண மண்டபம்-சித்தோடு), ஊஞ்சலூர் (சமுதாய கூடம்,ஊஞ்சலூர்), பெருந்துறை ட.ப., (சத்தி திருமண மண்டபம்,பெருந்துறை), பவானி நகராட்சி (பாலாஜி பத்மாவதி மண்டபம்,பவானி), அந்தியூர் பிளாக் (வாரி மஹால்,முனியப்பம்பாளையம்), சத்தி-கொமராபாளையம் (கொங்கு மஹால்).
News August 18, 2025
பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை விரைவில் எட்ட உள்ளதால் மூன்றாவது முறையாக இன்று வினாடிக்கு 5000 முதல் 10000 கன அடி வரை உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க கேட்டுக் கொண்டுள்ளனர்