News August 18, 2025

புதுவை மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்!

image

புதுவையில் பழங்குடி இன தாவரங்கள், விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பது தான் ஊசுட்டேரி சதுப்பு நிலம். பசுமையான சூழலில் மழைக்காலங்களில் வியக்கும் அழகோடும், படகு சவாரி செய்தும், இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் அதிகம் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.

Similar News

News August 19, 2025

ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் தற்கொலை

image

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (68). இவர் ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் ஆவார். இந்நிலையில், தேவநாதன் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2025

புதுவை: 10th போதும் இந்தியன் வங்கியில் வேலை

image

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த பணிக்கு மாதம் ரூ.14,000 சம்பளம், ஊக்கத்தொகை ரூ.1,000, போக்குவரத்து செலவு ரூ.1,000, மொபைல் ரீசார்ச் ரூ.300 ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW

News August 19, 2025

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு, விட்டுப் பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.17) இரவு கனமழை பெய்தது. இதனை அடுத்து, நேற்று (ஆக.18) வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW.

error: Content is protected !!