News August 18, 2025
சென்னையில் எங்கெல்லாம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்?

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) 12 இடங்களில் நடைபெறுகிறது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களை சேர்ந்த வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுத் தளங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 19, 2025
மூன்று மண்டலங்களில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி, முதற்கட்டமாக மண்டலங்கள் 2, 3,4-ல்,355 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது. இந்த திட்டம் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதிகாரிகள் கூற்றுப்படி, இது தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனிதர்களுக்கு வெறிநாய் காய்ச்சல் பரவுவதையும் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 18, 2025
BREAKING: சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 18, 2025
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.18) அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெறும் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.