News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: ED

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில் குமார் தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியுள்ளதை ED உறுதி செய்துள்ளது. 2002-ல் PMLA-வின் கீழ் பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இதில், ஏராளமான சொத்துக்கள், முதலீடு, டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ED தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. இதனால், பொன்முடி, செந்தில் பாலாஜி பாணியில் அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாம்.
Similar News
News March 14, 2026
தொகுதிக்கு ₹5 கோடி செலவு.. தவெக மா.செ.,க்கள் ஷாக்

நேற்று புஸ்ஸி ஆனந்த் நடத்திய கூட்டத்தில் தவெக மா.செ-க்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. *ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவுக்கு குறைந்தது ₹5 கோடி தேவைப்படும் *அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் கட்சியில் இல்லை *மக்களுக்கு பரிச்சயமான வேட்பாளர்களை கண்டறிவதில் சிக்கல் என கூறினராம். இதனால் தான் 90% மா.செ.,க்கள் கூட்டணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
News March 14, 2026
தள்ளுபடி.. CM ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
பெட்ரோல் பங்க்குகளில் மண்ணெண்ணெய்

வளைகுடா போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.


