News April 8, 2024
கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது

பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுரவாயல் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பூபதிராஜ் தலைமையில் போலீசார் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர், இந்நிலையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், பிரசாந்த், அசோக் ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
திருவள்ளூரில் இன்றைக்கு கரண்ட் கட்

திருவள்ளூரில் இன்று மின் வெட்டு காலை 9 மணி முதல் 2 மணி வரை இருளிப்பட்டு துணை மின் நிலைய பரமரிப்பு பணி காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், பெரியபாளையம் சாலை, ஸ்ரீநகர், இருளிப்பட்டு, சாய்கிருபா நகர்,MGR நகர், சத்திரம், சித்தி விநாயகர் பண்ணை, ஜகநாதபுரம், ஆமூர், மாலிவாக்கம், குதிரைப்பள்ளம், நெடுவரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

செங்குன்றம் அலமாதி 16வயது சிறுமியை 6ஆண்டுக்கு மேல் சொந்த சித்தப்பா வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்த புகாரை செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உத்தாசனப்படுத்தியுள்ளார். சொந்த சித்தப்பா ஜலாலுதீன் பாலியல் வன்கொடுமையால் தற்போது 4மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் GHதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
News July 4, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.