News April 8, 2024

நீலகிரி: மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

image

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மிகவும் சிறப்புமிக்கது. இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்கள் உணவு உண்ணாமல் தங்களது இறை நம்பிக்கையையும் ஈகை குணத்தையும் வெளிக்காட்டுவர், அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News

News January 27, 2026

ரூ.1லட்சம் பரிசு: அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

image

திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி மாநில அளவிலான விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெற விரும்பும் நபர்கள் வரும் பிப்.18ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் காசோலை (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

News January 27, 2026

நீலகிரி: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

உதகையில் மக்கள் கடும் அவதி

image

உதகையில் நேற்று திடீரென மூடுபனியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் நிலவிய கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. சாரல் மழையுடன் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

error: Content is protected !!