News August 18, 2025

தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News August 21, 2025

நாமக்கல் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நாமக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

News August 21, 2025

நாமக்கல் மக்களே 750 பேங்க் ஆபிசர் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே..பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.09.2025 ஆகும். வங்கி அதிகாரியாக சூப்பர் வாய்ப்பு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

விநாயகர் சிலைகளை கரைக்க 5 இடங்கள் தோ்வு!

image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரை விநாயகா் கோயில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, ப.வேலூா் காவிரி ஆறு,மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் காவிரி படித்துறை என 5 இடங்கள் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!