News April 8, 2024
கூத்தாநல்லூர் நகராட்சி வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
திருவாரூர்: பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வர்த்தக சங்க பொருளாளர் டி.ஜெயசெல்வம் திமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் இணைத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக இணைந்த ஜெயசெல்வத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் செல்வம் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: காரில் குட்கா பொருள்கள் கடத்திய இருவர் கைது!

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். நகர் இருவழிச்சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (28), குஜராத்தைச் சேர்ந்த சோமாபாய் (25) இருந்தனர். மேலும் காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 320 கிலோ இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.


