News August 18, 2025
தென்காசி: இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு – ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வலர்கள் இந்திய விமானப்படையில் 2026ம் ஆண்டிற்கான https://agnipathvayu.cdac.in என்ற அக்னிவீர்வாயு இணையதளத்தின் ஆள்சேர்ப்பிற்கு வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்க்கை தேர்வு 02.09.2025 முதல் ஆண்களுக்கும் 05.09.2025 முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.
Similar News
News August 18, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (18-08-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News August 18, 2025
BREAKING: சங்கரன்கோவில் நகராட்சிக்கு புதிய தலைவர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11:15 மணிக்கு துவங்கியது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 ஓட்டுகள் பெற்றார்.
News August 18, 2025
பாவூர்சத்திரம்: அழகு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.