News August 18, 2025
ராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து காவல் அதிகாரிகள்

இன்று (18.8.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பகல் ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் – குமார் (83000-15220), பரமக்குடி – சுரேஷ்குமார் (94981-22743), கமுதி – தெய்வீகபாண்டியன் (99944-30783), இராமேஸ்வரம் – சுல்தான் இப்ராகிம் (63793-74601), கீழக்கரை – சண்முகநாதன் (94429-80687), திருவாடானை – சைபுல் ஹிசாம் (96299-40473).
Similar News
News August 18, 2025
கீழத்தூவல் கிராமத்தில் முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழத்தூவல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மாபெரும் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க இருக்கின்றன.
News August 18, 2025
ராம்நாடு: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

ராம்நாடு இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 18, 2025
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள்

ராமநாதபுரம் இடையர்வலசை அருகே காவல்துறையினர் சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் அடிப்படையில் TN65K1868 வாகனத்தில் பதுக்கிய பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓட்டுநர் ஆரிஸ் கைது செய்யப்பட்டார். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரித்துள்ளார்.