News August 18, 2025

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.

Similar News

News March 14, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

கோபி அருகே விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், இன்று வேலைக்குச் சென்றபோது பூச்சாங்காட்டு தோட்டம் அருகே தனியார் கம்பெனி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான இவரது மரணம் குறித்து திங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

ஈரோடு மக்களே கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பின்படி, இன்று (14.03.2026) அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மக்கள் மனுக்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SHAREIT

error: Content is protected !!