News August 18, 2025

விருதுநகரில் ஆக. 22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் புதிய ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும் விவசாயிகள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சிவகாசி பகுதியை சேர்ந்த 44 வயது பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான தனது 14 வயது மகளுடன் தனியாக வசிக்கிறார். பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் பெண்ணிற்கு அங்கு டிரைவராக வேலை செய்யும் மாரிக்காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாரிக்காளை மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

News August 18, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

image

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 18, 2025

விருதுநகர் அரசுப் பணி: நாளை கடைசி.. உடனே APPLY

image

விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து நாளைக்குள் (ஆக. 19) அந்தந்த வட்டார அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு செப். 19லும், நேர்முக தேர்வு அக். 3லும் நடைபெற உள்ளது. எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!