News August 18, 2025
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 54 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாகக் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்கள் என்று இதுவரை போலீசார் 54 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News March 14, 2026
திருவாரூர் கோர்ட்டு அதிரடி!

குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜீவரேகா. இந்த பள்ளியில் +2 படித்த மாணவி ஒருவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கலியமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், மாணவி வயது குறித்து சாட்சியம் அளிக்க 18 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத ஜீவரேகாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 14, 2026
பாய்ந்த குண்டாஸ்: திருவாரூர் மாவட்ட எஸ்.பி அதிரடி!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட பாலசுந்தரம், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பரிந்துரையின் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


